சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, 23 டிசெம்பர் 2013

23 Dec,2013
 

மும்பையில் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து




நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது. சம்பவத்தன்று மாலை ஸ்ரீதேவி தனது இளைய மகள் குஷியுடன் வீட்டின் முதல் மாடியில் இருந்தார். 

மூத்த மகள் ஜான்வி தரைதளத்தில் உள்ள தனது அறையில் இருந்தார். போனி கபூர் அருகில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இந்தநிலையில், மாலை 6.15 மணியளவில் திடீரென ஜான்வியின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. 

படுக்கையில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான்வி அலறி அடித்தபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். மகளின் சத்தம்கேட்டு நடிகை ஸ்ரீதேவி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அறையில் பற்றி தீ எரிவதை பார்த்ததும் அவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். 

இருப்பினும் ஜான்வியின் அறையில் இருந்த படுக்கை மற்றும் நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போனி கபூர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். ஜான்வியின் அறையில் உள்ள ஏர்கண்டிசன் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐஸ்வர்யா ஒரு மிகச்சிறந்த தாய்: அபிஷேக் பச்சன்




மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியதாவது:- 

ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே. 

திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம்.

ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன். எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 



இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி



தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். சிம்பொனி இசையில் சாதனை புரிந்திருக்கும் இவரது இசை உலகமெங்கும் பரவி உள்ளது. 

‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 30-வருடங்களுக்கும் மேலாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நலம் மெல்ல தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.


ஜவுளி கடை திறப்பு விழாவில் அனுஷ்கா, ப்ரணிதாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி




நடிகைகள் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். இதற்காக கணிசமான தொகையை வாங்கிக் கொள்கிறார்கள். 

ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்து இருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள். 

அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடிகைகளிடமும் கை குலுக்க வந்தார்கள். அந்த வழியாக போக்குவரத்தும் தடைபட்டது. 

விழா அமைப்பாளர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுஷ்காவும், ப்ரணிதாவும் ரசிகர்கள் பிடியில் சிக்கும் சூழ்நிலை உருவானது. உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள். 

அதன்பிறகு அனுஷ்காவும், ப்ரணிதாவும் உள்ளே சென்றனர். அனுஷ்கா ரிப்பன் வெட்டி ஜவுளிக்கடையை திறந்து வைத்தார். ரசிகர்கள் தொல்லையில் இருந்து விடுபட இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. நமீதா உள்பட பல நடிகைகள் ரசிகர்கள் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்கள் மனதை புரிய முடியவில்லை: தனுஷ்




தனுசுக்கு இந்திப் படங்கள் குவிகிறது. இவர் நடித்த ‘ராஞ்சனா’ இந்திப்படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். முன்னணி இயக்குனர்கள் தனுசை அணுகி கதை சொல்லி வருகிறார்கள். இதனால் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு இந்திக்கு போய்விடுவார் என பேச்சு அடிபடுகிறது. 

இது குறித்து தனுசிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:– 

இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அங்குள்ள கலாசாரத்தை புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கிறது. ரசிகர்கள் மன நிலையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. யாருமே ரசிகர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறேன். இந்திப் பட வாய்ப்புகளை அவசரப்பட்டு ஏற்க மாட்டேன். மெதுவாகவே செல்ல விரும்புகிறேன். 

இவ்வாறு தனுஷ் கூறினார்.

 


இரண்டாம் உலகம்’ – விலகியது ஏன் ? – ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்ஸ

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி , இரண்டே நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்ட படம் ‘இரண்டாம் உலகம்’.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் இசையமைத்தார்.  பாடல்களையும் கூட சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அனிருத் படத்திற்கு பின்னணி இசையை அமைக்கிறார் என்றார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த படத்திற்கு அவர் பின்னணி இசையை அமைக்கவில்லை, படத்தின் வெளியீட்டைக் கருதி , அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம் என்றார்கள் ‘இரண்டாம் உலகம்’ தரப்பினர்.
ஆனால் , அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் போட்டு உடைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இன்று காலை ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “நான் பிஸியாக இருந்த போது இந்த படத்தின் இயக்குனர் அஹமத் வந்து என்னிடம் கதை சொன்னார். ஏற்கெனவே, சில படங்களை ஒத்துக் கொண்டிருந்ததால் இந்த படத்திற்கு எப்படி இசையமைப்பது என்று யோசித்தேன்.
அதன் பின், படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தால், ‘என்றென்றும் புன்னகை’ படத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன்.
படம் முடிந்து பின்னணி இசைக்கு தயாரானதும், அதே சமயம் வேறு ஒரு பிரம்மாண்டமான படத்திற்கும் பின்னணி இசையமைக்கும் வேலை வந்தது. அந்த படத்தைப் பார்த்தேன். அதன் பிறகு இந்த படத்தையும் பார்த்தேன்.
எனக்கு இந்த படம்தான் மிகவும் பிடித்திருந்தது. எனவே, அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் எனக்கு அதிக வேலை இருப்பதால் பின்னணி இசையமைக்க முடியாது என்று தெரிவித்தேன், ” என்றார்.
ஹாரிஸ் சொன்ன அந்த படம் ‘இரண்டாம் உலகம்’தான் என்பது சின்ன குழந்தையால் கூடவா கண்டு பிடிக்கமுடியாதுஸ
அப்போதே ‘இரண்டாம் உலகம்’  படத்தின் தரத்தை தீர்மானித்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ் ‘என்றென்றும்’ வெற்றி படத்தில் இருக்க ‘என்றென்றும் புன்னகை’ படத்தை தேர்வு செய்துள்ளார்.

 

இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

வெங்கட் பிரபுவின் தயவால் நடிகராகவும் அனைத்து ஹீரோக்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் அவருடைய தம்பி பிரேம்ஜி.
சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் கூட கார்த்தியின் நண்பராக நடித்திருந்தாலும் படம் முழுவதும் இவர் வரும்படி முக்கியத்துவம் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு.
நடிகராக மட்டுமல்லாமல் ‘என்னமோ நடக்குது, மாங்கா’ படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைத்து வருகிறார்.
‘பிரியாணி’ படத்தின் பிரமோஷனுக்காக நேற்று விஜய் டிவியில் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பிரேம்ஜி அளித்த பதில் , இதோஸ
“நான் இசையமைக்கிற படங்கள்ல பெரியப்பா இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன். டைரக்டர்ஸ் இப்படி வேணும் அப்படி வேணும்னு கேப்பாங்க. நான் இளையராஜா இசையில ஏதாச்சும் பாடல் சொல்லுங்கன்னு கேப்பேன், அதை அப்படியே உல்டா பண்ணி  பாட்டால் மாத்திடுவேன்.
ஏன்னா, நான் முறையா இசை படிக்கலை, ராகம்லாம் எனக்குத் தெரியாது.
அப்புறம், நிறைய பேர் நான் வெங்கட் பிரபு படத்துல நடிக்கிறன்னு கமென்ட் பண்றாங்க. ட்விட்டர், பேஸ்புக்லலாம் கூட வந்து, “வெங்கட் பிரபு நிழல்ல இருக்கிறன், நான் வேஸ்ட், மொக்கை பீசு” அப்படின்னு கமென்ட் பண்றாங்க.
ஆமாம், நான் வேஸ்ட்தான், மொக்கை பீசுதான். வெங்கட் பிரபு படத்துலதான நான் நடிக்கிறேன். உனக்கு ஏன்யா எரியுது.
என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினது சிம்புதான். ‘வல்லவன்’ படத்துல நயன்தாரா ஃபிரண்டா என்னை அறிமுகப்படுத்தினாரு. அவரே, வெங்கட் கிட்ட சொல்லி என் கிட்ட என்னமோ இருக்குன்னு சொன்னதாலதான் வெங்கட்டும் ‘சென்னை 28’ல நடிக்க வச்சாரு, ” என்றார்.
பிரேம்ஜிய நடிகராக்கின நல்ல காரியத்தை பண்ணது நீங்கதானா சிம்புஸ.
உங்களைத்தான் நிறைய பேர் தேடிட்டிருக்காங்க

 

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

தனுஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரே நாளில் உலகப் புகழ் தேடிக் கொடுத்த பாடல் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல்.
இப்பாடல் வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். இதுவரை இப்பாடல் 7,53,84,530 ஹிட்களை யூ டியூப்பில் அள்ளியுள்ளது.
அதன் பிறகு தனுஷ் எங்கு சென்றாலும் அந்த பாடலைப் பாடச் சொல்லி ஒரே அன்புத் தொல்லையாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த பாடலைப் பாடிய தனுஷ், இப்போது அந்த  பாடலைப் பாடிப் பாடி போரடித்து விட்டது என்கிறார்.
“என்னை நடிகன் என்றே மறந்து விட்டார்கள் எனத் தோன்றுகிறது. நான் எங்கே சென்றாலும் முதலில் ‘கொல வெறி’ பாடலில் இருந்து இரண்டு வரிகளாவது பாட வேண்டும் என்கிறார்கள்.
அவர்ளின் அளவு கடந்த மரியாதை மகிழ்ச்சியடைய வைக்கிறது, இருந்தாலும் இப்போது ரொம்பவே போர் அடிக்கிறது,” என்கிறார் தனுஷ்.
சர்வதேச அளவில் ‘பேர்’ வாங்கிக் கொடுத்த பாடலை ‘போர்’ அடிக்கிறது என்பது சரியா தனுஷ்

 

‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்ஸ

சன்னி லியோன்ஸஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்காது.
‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாங்காங்கில் , குத்தாட்டம் போட்டு வருகிறார் சன்னி லியோன்.
சன்னி லியோனின் தீவிர ரசிகரான ஜெய்யின் கனவுப் பாடலாக இப்பாடல் வருகிறதாம்.
இப்பாடலுக்காக சன்னி லியோன் பாவாடை, தாவணியிலும், ஜெய் வேட்டி சட்டையிலும் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டதாம்.
‘பாவாடை, தாவணி’யில் தன்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தாராம் சன்னி. அழகான ஆடையாக இருக்கிறது என்றும் பாராட்டினாராம்.
எப்பேர்ப்பட்ட அழகி வந்தாலும் நம்ம ஃபேவரிட் டிரஸ்ல ஆட வைக்கலன்னா நம்மாட்களுக்கு தூக்கம் வராது.
ஆனால், சன்னி லியோன் ரசிகர்கள் இந்த ‘பாவாடை-தாவணி’ அழகை ரசிப்பாங்களாஸ?
‘பாவாடை தாவணியில்ஸரசிக்கும் உருவமாஸ.’-ன்னு பாடிட மாட்டாங்களா






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies