சினிமா செய்தித் துளிகள் திங்கட்கிழமை, 16 டிசெம்பர் 2013

16 Dec,2013
 






 இளைஞர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும்: நடிகர் விவேக்





தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கிராம உதயம், கிரீன் குளோப் அமைப்புகள் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தலைமை வகித்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:– முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த தினத்தையொட்டி தமிழகத்தில் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். கிராம உதயம் அமைப்பின் சேவை மகத்தானது என்றார் அவர். நடிகர் விவேக் பேசியதாவது:–

தமிழகத்தில் இதுவரை 20.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து வந்த நான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதயம் அமைப்பின் மூலம் விவசாயிகளை சந்தித்து மரக்கன்றுகள் வழங்கி வருகிறேன். 50 ஆண்டுகளுக்கு முன், வெளியே சென்றால் சட்டை கசங்காமல் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் வெளியேல் சென்றால், சட்டை நிறம் மாறி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அந்தளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது.

வெப்பம் அதிகரித்து, குளிச்சி குறைந்த காரணத்தால் மழை இல்லை. மழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீராதாரம் இல்லை. விவசாயம் அழிந்து வருகிறது. விளை நிலங்களை விற்கும் நிலை மாறவேண்டும். ரசாயன உரங்களால் மண்ணில் தன்மை மற்றும் தழைச்சத்துக்களை இழந்து விட்டோம். விஞ்ஞானத்தை நோக்கி செல்லும் இளைஞர்கள் விவசாயத்தை நேசிக்க வேண்டும். விளை நிலங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வைக்கும். மரங்கள் ஆக்சிஜனை தருகின்றன. அதன் மூலம் மாசற்ற காற்றை சுவாசிக்க முடியும். இங்குள்ள மக்கள் உழைப்பாளிகள். தமிழ் பண்பாட்டை வளர்த்த தாமிரபரணி என்றார் அவர்.



சந்திரமுகி’ 2–ம் பாகத்தில் நடிக்க ரஜினி பரிசீலனை?



ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா இணைந்து நடித்து 2005–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'சந்திரமுகி'. தமிழகத்தில் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. இப்படத்தை பி.வாசு இயக்கினார்.
தற்போது சந்திரமுகியின் 2–ம் பாகம் தயாராகுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இதற்கான கதையை பி.வாசு தயார் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு பின் அடுத்து ரஜினி நடிக்கப் போகும் படம் எது என்று அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கே.வி.அனந்த், அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது. 
இந்த நிலையில் பி.வாசுவும், சந்திரமுகி படத்தின் 2–ம் பாகத்தை ரஜினியை வைத்து இயக்க ஆர்வம் காட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ரஜினி நடித்தால் மட்டுமே சந்திரமுகி 2–ம் பாகத்தை தமிழில் இயக்குவேன். இல்லாவிட்டால் அப்படத்தை எடுக்க மாட்டேன் என்றார். 
சந்திரமுகி 2–ம் பாகத்தில் நடிப்பது குறித்து ரஜினி பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை கேட்டு விட்டு முடிவை அறிவிப்பார் என தெரிகிறது. டைரக்டர் பி. வாசு அழைப்பை ஏற்று சந்திரமுகி 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.



தோட்ட தொழிலாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் திரைப்படம் “இங்கிருந்து”



தமிழகத்தில் இருந்து பிரித்தானியர்களால் இலங்கைக்கு கூலிகளாக அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஆசிரியையாக இருக்கும் சிவமோகன் சுமதி என்பவரால் “இங்கிருந்து” என்ற தலைப்பிலான இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினையில் முக்கியமானவர்களாக பெருந்தோட்ட மக்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அத்துடன் அவர்களின் பிரச்சினைகளை இந்திய அரசாங்கமோ, தமிழக அரசாங்கமோ வெளிச்சப்படுத்துவதில்லை.

இந்தநிலையில் தமது திரைப்படத்தின் மூலம் இந்திய வம்சாவளிகளான தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லமுடியும் என்று சுமதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் வர்த்தக நோக்கை கொண்டு தயாரிக்கப்படவில்லை. எனவே உள்ளுரில் உள்ள 4 முக்கிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

18 நாட்களில் இந்த படம் தயாரிக்கப்பட்ட போதும் அதற்கான ஆயத்தங்களுக்கு அதிக காலம் பிடித்தது. சில இடங்களில் படப்பிடிப்புக்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் இடம்தரவில்லை.

எனவே அனுமதியில்லாமல் மறைந்திருந்தே படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டன என்று சுமதி குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் கொழும்பில் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


விஜய்யுடன் ஜோடி சேர ஆசைப்படும் ஹனிரோஸ்



இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ்.
மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ்.

தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு ராஜகம்பள வரவேற்பு தான்.

த்ரிவேண்ட்ரம் லாட்ஜ், ஹோட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.

அதனால் இப்போது வரிசையாக இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களால் நிரம்பிக் வழிகிறது ஹனிரோஸின் கால்சீட் டைரி.

மலையாளத்தில் இவ்வளவு பிஸியாக இருக்கும் ஹனிரோஸ் நம்ம இளைய தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை.

எனவே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற தனது ஆசையை தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் பரப்பி வருகிறாராம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies