கொலிவுட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன்.
இவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அனைத்து படங்களுமே ஹிட் ஆனதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவரது முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு நிலவி வந்தது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லட்சுமி மேனன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அழகான பொண்ணு கிடையாது, பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன்.
அழகு என்கிற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது.
என் தோற்றத்துக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன், முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன், அதுதான் எனது வெற்றிக்கு காரணம்.
முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம்.
அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு, இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன்.
ஏனா அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க என்று கூறியுள்ளார்.
மலையாளத்தில் உருவாகும் “மெடுலா ஆப்லெங்கெட்டா”
தமிழில் வேகமாக வளர்ந்து வரும் வேந்தர் மூவீஸ் கேரளாவிலும் கால்பதிக்கிறது.
இந்நிறுவனம் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்ய உள்ளது.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தலையில் அடிபட்டு சில வருட நினைவுகள் மறந்து போகும்.
இதற்கு மெடுலா ஆப்லெங்கெட்டா என்று பெயர், இதனையே அவர் படத்திலும் அடிக்கடி சொல்வார்.
இதனையே மலையாள படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
சுரேஷ் நாயரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நேரம் நாயகன் நிவின் நடிக்கிறார்.
படத்தின் புரமோசனுக்காக தமிழ் பாடலை ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கு நல்ல முறையில் டான்ஸ் ஆடும் அணிக்கு பரிசு கொடுக்கவும் இருக்கிறார்கள்.
என் மகளை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கிறது: சூர்யா
எதிர்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, மாலினி 22 பாளையங்கோட்டை படம் தொடங்கிய நாளிலிருந்தே எனக்கு தெரியும்.
படம் என்பது இரண்டரை மணி நேர எண்டர்டெயின்மெண்டாக இல்லாமல், படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனபிறகும் படம் பார்த்த தாக்கம் இருக்கவேண்டும்.
ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் படங்கள் எத்தனை என்பதை கடைசி 3 வருடங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
மற்ற துறையில் இருப்பவர்களிடம் பேசும்போது நல்ல கருத்துள்ள படங்கள் என்றால் 2-3 படங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இதில் நானும் அடக்கம் என்பதை மறுக்கவில்லை.
தற்போதைய தலைமுறையின் மீது பெரிய பழியே இருக்கிறது. என் மகளின் தலைமுறை வெளிவரும்போது சமூகம் எப்படி இருக்கும் என்று ஒரு பயம் கண்முன்னே தெரிகிறது.
இன்று ஒரு அமெரிக்க பேப்பரில் அஸ்ஸாம் மாநிலத்தில் ‘ரேப்' ஃபெஸ்டிவல் நடப்பதாக எழுதியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் யாரும் இந்தியாவிற்கு போகாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள்.
நாட்டில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறோம். சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடக்கிறது.
நம்மிடம் மிகவும் பலமான காட்சி ஊடகம் இருக்கிறது, இதை வைத்து நாம் நினைப்பதை செய்யலாம்.
புதுமைப்பெண், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்கள் வேண்டும் என தோன்றுகிறது.
கலைத் துறையிலும் தொழில் நுட்பத்துறையிலும் பெண்கள் அதிக அளவில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அதற்கு இந்த படம் ஒரு முயற்சியாக இருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுசிடம் தமிழ் கற்கிறேன்: அம்ரியா
கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாகியுள்ளார் இந்தி நடிகை அம்ரியா. தமிழ் தெரியாததால் படப்பிடிப்பில் சிரமப்படுகிறார். தனுஷ் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். இது குறித்து அம்ரியா கூறியதாவது:–
எனக்கு தமிழ் தெரியாது. படப்படிப்பில் தினமும் வார்த்தைகள் கற்று வருகிறேன். சாப்பிட்டீங்களா எப்படி இருக்கீங்க போன்ற வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளேன். தமிழில் நான் பேச வேண்டிய வசனங்களை மெதுவாக சொல்ல வைத்து பதிவு செய்து கொள்கிறேன். பிறகு அதை இந்தியில் எழுதி வைத்து படிக்கிறேன்.
தனுஷ் தமிழ் கற்று தருகிறார். தமிழ் வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லி தருகிறார். மொழி பிரச்சினையால் எனக்குள்ள சிரமங்கள் அவருக்கு புரிந்துள்ளது.
இவ்வாறு அம்ரியா கூறினார்.