சினிமா செய்தித் துளிகள் வெள்ளிக்கிழமை, நவம்பர் 08

08 Nov,2013
 

 அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்




‘பரதேசி’ படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் ‘இரும்புக்குதிரை’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இன்னொரு நடிகையாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் லட்சுமிராய் பைக் சாகச வீராங்கனையாக நடிப்பதாக இருந்தது. இதற்காக, கடந்த சில நாட்களாக பைக் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இதுவரை லட்சுமிராய்க்கு அழைப்பு வரவே இல்லையாம்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டால், லட்சுமிராய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறுகின்றனர். லட்சுமிராயிடம் கேட்டால், முதலில் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.





விஷாலுக்கு அட்வைஸ்




இனிமேல் ஆக்ஷன் கதைகளில் நடியுங்கள் என்று விஷாலுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன்.

விஷாலின் பாண்டியநாடு படம் திரையரங்கு வரும் ரசிகர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வண்ணம் உள்ளது.

மதகஜராஜா படத்திற்கு சுமார் நாற்பது கோடியை கடனாக கொடுக்க முன் வந்த அன்புச்செழியன் அந்த படம் கைநழுவிப் போன கஷ்டத்திலிருந்த விஷாலுக்கு, கவலைப்படாதீங்க உங்க பாண்டிய நாடு படத்தையும் நானே ரிலீஸ் பண்ணி தர்றேன் என்று கூறி வெற்றிகரமாக ரிலீஸ் செய்தும் கொடுத்துவிட்டார்.

இவர் மட்டும் இந்த படத்தை கையில் எடுக்கவில்லை என்றால் அஜித்தின் ஆரம்பம் படத்தை மீறி திரையரங்குளை ஒதுக்கியிருக்க முடியாது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதற்கிடையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் செய்துள்ளாராம்.

இனிமேலும் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு படம் கொடுக்கிறேன்னு இறங்கி வீணா போகாதீங்க என்றும் ஹரி மாதிரி ஆக்ஷன் பட இயக்குனர்களுடன் சேர்ந்து படம் பண்ணுங்க, அப்பதான் இழந்த மார்க்கெட்டை பிடிக்க முடியும் எனவும் கூறியுள்ளாராம்.

தற்போது விஷால் நடிக்கப் போகும் நான் சிவப்பு மனிதன் படத்திற்கு பிறகு விஷாலின் முடிவுகள் ஆக்ஷன் படம் பக்கம் நோக்கியிருக்குமாம்.

அதுமட்டுமல்ல கமர்ஷியல் இயக்குனர்கள்தான் அவரது அடுத்த சாய்ஸ் என்கிறது கொலிவுட் வட்டாராம்.





நான் கோடம்பாக்கம் வரமாட்டேன்: அடம்பிடிக்கும் ஸ்ரீதிவ்யா



ஆந்திராவை விட்டு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.

அப்படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காக இடம்பிடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பென்சில், வீர தீர சூரன் என அவருக்கு மள மளவென படங்கள் புக் ஆகி வருகின்றன.

இதனால் ஐதராபாத்தில் இருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்துக்கு வருமாறு சிலர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால் அதற்கு மறுத்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போதைக்கு ஐதராபாத்தை விட்டு வரமாட்டேன், வந்தால் என் படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளாராம்.






மார்க்கெட்டை உயர்த்தும் சந்தானம்





மார்க்கெட்டை உயர்த்துவதற்காக இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் சந்தானம்.

தற்போதைய நம்பர் ஒன் கொமடியனாக சந்தானம் பல படங்களில், ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போலவே நடித்து வருகிறார்.

இது தவிர இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில் என்றென்றும் புன்னகை படத்தின் டிரெய்லரில் அவர் பேசும் வசனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த காட்சியைப் பார்த்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவரும் மறுபிரவேசம் செய்திருக்கும் இந்த நேரத்தில் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பால் தனது மார்க்கெட் போய்விடக்கூடாது என்று கருதிய சந்தானம் இனி ஆபாசமாக, வசனம் பேசப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.





 டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி கைதாவாரா?


‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழ் பெற்றார். பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த அவர்,வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய அஞ்சலி, சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசி, டைரக்டர் களஞ்சியம், சித்தி பாரதிதேவி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இருவரும் சேர்ந்து என்னை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு களஞ்சியம்தான் பொறுப்பு என்றும் அஞ்சலி கூறியிருந்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த களஞ்சியம், அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அஞ்சலிக்கு கடந்த மாதம் 29–ந்தேதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடிகை அஞ்சலி தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜெகனாப்பேட்டை என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த பகுதி, ராசுல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும்.

இதையடுத்து, சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு நகல் ராசுல் போலீஸ் நிலையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் களஞ்சியத்தின் வக்கீல் ஜெயபிரகாஷ் இதனை தெரிவித்தார்.

இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அஞ்சலி கோர்ட்டில் சரண் அடைய முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே விரைவில் அவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பரபரப்பின்றி காணப்பட்ட அஞ்சலி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.





 டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை: படவிழாவில் ராதிகா சரத்குமார் பேச்சு





நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படம் 'மாலினி 22 பாளையங்கோட்டை'. இப்படத்தில் கிருஷ்ணா ஜே.சதார், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் சங்கர் இசையமைக்கிறார். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் ஆடியோவை நடிகர் கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தையில் இருந்தே பழக்கம். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரைக் கூறலாம். ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார். ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இன்று வரும் பல படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் ரசிக்க ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. அந்த வரிசையில் இந்த படமும் வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.





 தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் இணையும் சூர்யா




சூர்யா, மலையாள படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சரத்குமார், ஆர்யா, ஜீவா, ஸ்ரீகாந்த் போன்றோர் மலையாளத்தில் நடித்துள்ளனர். சரத்குமார், 'பழசிராஜா'விலும், ஆர்யா 'உருமி'யிலும், வந்தார்கள். ஜீவா 'கீர்த்தி சக்கரா' படத்தில் நடித்தார். இப்படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.

இவர்களை தொடர்ந்து சூர்யாவும், 'குஞ்சலி மராக்கர்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லாலும் நடிக்கின்றனர். மம்முட்டி போர் வீரனாக வருகிறார். மோகன்லால் குஞ்சலி மராக்கர் வேடத்தில் வருகிறார். சூர்யாவும் மோகன்லாலுக்கு இணையான வேடத்தில் வருகிறாராம். அவருக்கு என்ன கேரக்டர் என்பது ரகசியமாக உள்ளது.

இந்த படத்தை பிரியதர்ஷன் டைரக்டு செய்கிறார். இதை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள் ளனர். சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயராகிறது. கதாநாயகிகள் தேர்வு நடக்கிறது. சூர்யா நடிப்பது குறித்து பிரியதர்ஷனிடம் கேட்டபோது இன்னும் முடிவாகவில்லை. கதை விவாதத்தில் பிசியாக இருக்கிறோம் என்றார்.

‘குஞ்சலி மராக்கர்’ படத்தில் இந்தி நடிகை கரீனா கபூரும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் பரவின. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.





 சிம்பு, ஆண்ட்ரியா காதலா? –ஹன்சிகா பதில்



சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையில் ஓட்டி உராசியபடியும் கொஞ்சியபடியும் படங்களில் தெரிந்தார்கள்.

வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும் ஆண்ட்ரியாவும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். அந்த படத் தில் நடித்தபோது இப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

படத்தில் நடித்தபோது இருவருக்கும் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று வி.டி.வி. கணேஷ் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு, ஆண்ட்ரியா இடையே காதல் துளிர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின.

ஏற்கனவே சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். இதை இருவரும் பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தார்கள். உடனடியாக திருமணம் செய்து கொள்ள சிம்பு விரும்பினார். ஹன்சிகாவோ ஐந்து வருடம் கழித்துதான் திருமணம் என்றார். இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் சிம்பு ஆண்ட்ரியா நெருக்கமான படங்கள் வந்துள்ளன. சிம்புவை ஆண்ட்ரியா காதலிக்கவில்லை என்று ஆண்ட்ரியாவின் செய்தி தொடர்பாளர் மறுத்தார். அவர்கூறும் போது, ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் இருவரும் கவுரவ தோற்றத்தில் ஐந்து மணி நேரம் மட்டுமே நடித்தனர். தொழில் ரீதியான தொடர்பே உள்ளது. அதை தாண்டி எந்த உறவும் இல்லை. ஆண்ட்ரியா யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார்.

ஹன்சிகாவும் இப்பிரச்சினையில் நெருக்கமானவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘சிம்புவும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக நடித்ததில் எனக்கு கோபம் இல்லை. காதல் காட்சிகளில் நானும் மற்ற ஹீரோக்களுடன் அப்படித்தான் நடிக்கிறேன். சிம்புவும் நானும் நடிகர்கள், எங்களுக்கு நெருக்கமாக நடிப்பது தவறாக தெரியவில்லை என்றார்.




கவலையில் கரீனா கபூர்


நடிக்க வந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதை நினைத்து கவலைப்படுகிறாராம் கரீனா கபூர்.

பல வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் கரீனா சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்.

இவரது தந்தை ரந்தீர் கபூர் ஒரு நடிகர். கரீனாவின் அக்கா தான் நடிகை கரிஷ்மா கபூர்.

இந்நிலையில் இவர் இம்ரான் கானுடன் சேர்ந்து நடித்துள்ள கோரி தேரே பியார் மெய்ன் படத்தை விளம்பரப்படுத்த அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய கரீனா, நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன், படங்களில் அதிக ஆர்வமாக இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை.

ஆனால் அதற்காக தற்போது வருத்தப்படுகிறேன் என்றும் படிப்பது முக்கியம், நிறைய படிக்காவிட்டாலும் கொஞ்சாமவது படித்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கோரி தேரே பியார் மெய்ன் படம் வரும் 22ம் திகதி வெளியாகவுள்ளது.





ரம்யாவுக்கும் அஜித்துக்கும் கல்யாணம்!



விஜய் தொலைக்காட்சியின் அழகுத் தொகுப்பாளினி ரம்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ‘கிங் க்வீன் ஜாக்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ரம்யா.

பின்னர் வாய்ப்புகளும் குவிந்ததோடு ரம்யாவுக்கு ரசிகர்களும் குவிந்தனர்.

விசுவல் மீடியா படித்துள்ள இவர் இதுவரை சீரியல் வாய்ப்புகளையும், சினிமா வாய்ப்பினையும் தவிர்த்தே வந்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். அப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

மாப்பிள்ளை பெயர் அஜித். லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கிறாராம்.

லண்டன் மாப்பிள்ளையாக இருந்தாலும் சென்னையை விட்டு போகமாட்டாராம். அஜித்துக்கும் சென்னைதான் ரொம்ப பிடிக்குமாம். அதைவிட ரம்யாவின் நிகழ்ச்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது, அதற்கு முன்னதாக திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.







Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies