விரக்தியில் ஐஸ்வர்யா
05 Nov,2013
தான் நடித்த படம் ஓடவில்லை என்ற காரணத்தால் விரக்தியில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா தேவன்.
அபியும் நானும், மொழி, சத்தம்போடாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ்.
இவர் நடித்த சிம்மாசனம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா தேவன் நடித்தார்.
இவரது போட்டோவை இணையத்தளத்தில் பார்த்து அதன் மூலம் படத்தில் நடிக்க தேர்வு செய்தார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
படம் வெளியாகி வெற்றி பெறவில்லை, இதனால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா புது படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் ஏற்க மறுக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிப்படையாக பேச விரும்புகிறேன். திரையுலகில் எனது வளர்ச்சி சந்தோஷம் தரவில்லை.
நல்ல வேடங்களைத்தான் எதிர்பார்க்கிறேன், ஆனால் வருகிற வேடங்கள் திருப்தியாக இல்லை.
எனவே மலையாள படங்களிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.
தமிழ் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்துகிறேன்.
தற்போது தமிழில் கண்டுபிடி கண்டுபிடி என்ற படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே யுவன், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.