இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கிய நயன்தாரா தோல் சம்மந்தமான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்.
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா.
விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தாலும், தனக்கு ஏற்றவாறு தெரிவு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் நயன் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாராம், இதற்கு காரணம் ஓவராக மேக்கப் போடுவது தானாம்.
குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்டால் நயனின் தோல் அலர்ஜி பிரச்சனை அதிகரித்து விடுகிறதாம். இந்த பிரச்சனைக்கு அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
இதேபோன்று அவதிப்பட்டு வந்த சமந்தாவும் 3 மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் சாதனை படைக்கும் கிரிஷ்- 3
வெளியான முதல் நாளிலேயே 25.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள கிரிஷ்-3.
ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் விவேக் ஓபராயின் நடிப்பில் தீபாவளி விருந்தாக வந்த படம் கிரிஷ்-3.
வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் 85 முதல் 100 சதவிகிதமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ் இந்தப் படத்தை “ஒரு சூறாவளி” என்று குறிப்பிட்டுள்ளார்.
படம்குறித்து தனது இணையதளப் பக்கத்தில், தீபாவளிக்கு முதல் நாள் படம் வெளியானது, அன்று விடுமுறை தினமாக இல்லாத போதிலும் 25.5 கோடி வசூலாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ஹிரித்திக் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“அதுதான் அஜித்” புகழ்ந்து தள்ளிய ஆர்யா
அஜித், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
அஜித்குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் திகதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார் ஆர்யா.
அவர் கூறுகையில், அஜித் எப்போதும் என் பேவரைட், அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ரசிகன்.
அவருடன் நடித்தபோது சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார்.
அதே சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது என்று தான் நினைத்தேன்.
அஜித்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு.
டூப் போடாம நடித்தார், எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு.
ஆனா ஒண்ணு சொல்லணும் அஜித்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது.
படத்தில் என்னுடைய நடிப்பை அஜித் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.
படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க.
ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமல்லாமல், எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு.
பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு, அதுதான் அஜித் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஹன்சிகாவை ஓரங்கட்டியவிஷால்
லட்சுமி மேனன் கேட்டுக் கொண்டதால், தனது படத்திலிருந்து ஹன்சிகாவை ஓரங்கட்டியுள்ளாராம் விஷால்.
விஷால்- லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டிய நாடு.
இந்த படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாம்.
இந்நிலையில் விஷாலின் புதிய படமான நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்க விஷால் விரும்பியுள்ளார்.
ஆனால் லட்சுமி மேனனோ நம்ம கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது, அதனால் நாம் மீண்டும் ஜோடி சேர வேண்டும் என்று கூறினாராம்.
இதனையடுத்து விஷால் ஹன்சிகாவை விட்டுவிட்டு லட்சுமி மேனனையே மீண்டும் நாயகியாக்கி உள்ளார்.