தனது படத்தின் தயாரிப்பாளரை தெரிவு செய்துவிட்டாராம் பாலிவுட் கனவுகன்னி ஐஸ்வர்யா ராய்.திருமண வாழ்க்கைக்கு பின்பு குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விட்ட ஐஸ்வர்யா இரண்டு வருடங்கள் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை.இவர் மீண்டும் குத்துப்பாடலுடன் ரீஎண்ட்ரி ஆகப்போகிறார் என்றெல்லாம் பாலிவுட்டில் தண்டோராக்கள் வெளிவந்தம் இருந்தன.இந்நிலையில் இவர் தனது கணவர் அபிஷேக்குடன் மீண்டும் நடிப்பினை தொடரப்போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது பாலிவுட் சினிமா வட்டாரம்.தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரும் ரெடியாகிவிட்டாரம், ஆனால் அவரின் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஷாக வைத்துள்ளாராம் ஜஸ்வர்யா.மேலும் வருகின்ற 2014ம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன நிஜ வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கும் தமிழ் படம்பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் தனது முதல் திரைப்படத்தை இயக்குகின்றார். 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற அவரது திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் விலங்கியல் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது.நிதின் சத்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நிஜவாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் இணைந்து நடிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போவதும், பூங்காவின் காப்பாளரான நிதின் சத்யா ஒரு நாள் முழுவதும் செலவிட்டு அவர்களைக் கண்டுபிடிப்பதுவும் இந்தபடத்தின் கதையாகும். இது ஒரு மிகவும் சவாலான கதையாகும். இயக்குனரும், தயாரிப்பாளர் அனூப்பும் இந்தக் கதையை நன்கு திட்டமிட்டபின்னரே களத்தில் இறங்கியுள்ளனர். அதுபோல்,ஒன்றாகப் பிறந்த நான்கு பேர் திரைப்படத்தில் நடிப்பதும் புதிய முயற்சியாகும்.நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரிகள் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். இந்தப் படத்தின் 95 சதவிகிதப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது.இதன் சில பகுதிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு நடத்திய முதல் குழுவினர் நாங்கள்தான் என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்கள். தலக்கோணம் நீர்வீழ்ச்சியிலும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.சில சிறப்பம்சங்களுக்காக இந்தப் படத்தினை லிம்கா சாதனை புத்தகத்திற்கும் அனுப்பியுள்ளோம் என்று நிதின் சத்யா தெரிவித்தார். இயக்குநர் ஜெயம் ராஜா மற்றும் மனு( காதல் மன்னன் புகழ்) போன்றோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சிம்புவுடன் இணையும் ஆண்ட்ரியாநடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மின், வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'இங்க என்ன சொல்லுது' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகின்றது. இதில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்துள்ளார். சிம்புவின் காதலியாக அவர் இதில் தோன்றுகிறார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது போன்ற நகரத்துக் காட்சிகள் சில இதுவரை படமாக்கப்பட்டுள்ளன.சிறப்புத் தோற்றமாக இல்லாமல் ஆண்ட்ரியாவும் இதில் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றார். தன்னுடன் இதுவரை நடித்திராத அதேசமயம் திறமையான நடிகை ஒருவரை இந்தவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினார்.இந்த ஜோடி திரையில் புதுமையாகவும் அதேசமயம் நல்ல நடிப்புத் திறமையுடன் இணைந்தும் திரையில் தோன்றுகின்றனர் என்று கணேஷ் கூறினார்.பிரஷ்ஷாக இருக்கிறார் மீரா ஜாஸ்மின்இங்க என்ன சொல்லுது திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரப்போகிறாராம் மீரா ஜாஸ்மின்.மல்லுவுட் சினிமா உலகில் ராஜேசுடன் காதல், சினிமா நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு என்று பல சர்சைகளில் சிக்கிவந்தார் மீரா.தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மல்லுவுட் உலகம் அவருக்கு வழிவிட்டதோடு, கொலிவுட் உலகமும் அவரை அழைத்திருக்கிறது.தற்போது தமிழில் வி.டி.வி கணேஷுடன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சந்தானம், சிம்பு என்று மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அப்படியே மீராஜாஸ்மின் தமிழில் ஒரு ரவுண்டு வருவதற்கான அத்தனை சங்கதிகளும் இப்படத்தில் இருப்பதாக நம்புகிறது சினிமா வட்டாரம்.இது தவிர தினந்தோறும் யாராவது போன் செய்து கதை சொல்லணும் என்று கேட்கிறார்களாம்.அவர்களிடம் எவ்வித அவசரமும் காட்டாமல், இங்க என்ன சொல்லுது படம் வந்துரட்டும் பிறகு பார்க்கலாம் என்கிறாராம்.ஆரம்பம் கௌண்ட் டவுன் ஸ்டார்ட்தீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு கௌண்ட் டவுனை ஸ்டார்ட் செய்து விட்டது அஜித்தின் ஆரம்பம்.உலக அளவில் அஜித் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆரம்பம்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்துள்ளார்கள்.தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விட்ட நிலையில் ரீரிக்கார்டிங், டப்பிங் என பல வேலைகள் முடிந்துவிட்டன.மேலும் படத்தின் பின்னணி இசை கோர்வும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.இதற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் இரவு பகல் பாராமல் உழைத்த வண்ணம் உள்ளனர்.மொத்தத்தில் இப்படம் அமர்களமான ஆரம்பமாக தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி வருகிறது என்கிறது சினிமா வட்டாரம்.தீபிகாவின் நடனத்தில் மயங்கிய ரசிகர்கள்ராம் லீலா படத்தில் தனது நடனத்தினால் 3 மில்லியன் ரசிகர்களை அள்ளியுள்ளாராம் தீபிகா படுகோனே.சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள திரைப்படம் ராம் லீலா.சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டதோடு ஒரு பாடலும் சேர்த்து வெளியிடப்பட்டது.தாண்டயா திருவிழா தொடர்பான இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்க தனது அழகிய நடத்தினை வாரி இறைத்துள்ளார் தீபிகா.யூடியுபில் வெளியான இப்பாடல் 3 மில்லியன் ரசிகர்களை அள்ளியுள்ளதாம்.ரன்வீர், தீபிகாவின் கலக்கலான ரொமான்சில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற நவம்பர் மாதம் பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது.