சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்த ஹன்சிகா மீண்டும் அவர் இயக்கும் அரண்மனை படத்தில் நடிக்கிறார்.திகில் படமாக உருவாகும் இதில் நடித்தபோது ஹன்சிகா பயத்தில் நடுங்கினாராம்.இதுகுறித்து அவர் கூறுகையில்,முதன்முறையாக எனக்கு பயம் தொற்றிக்கொண்டது.இதற்குமுன் நான் ஏற்று நடித்த வேடங்களுக்காக இதுபோல் நடுங்கியது கிடையாது.மேலும் இந்த படம் எனக்கு சவாலானது என்றும் இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை எனவும் கூறியுள்ளார் ஹன்சிகா.இப்படத்தில் அவர் பேயாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்லன் அவதாரத்தில் உலகநாயன்உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன்.விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது.லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம்.ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார்.இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார்.இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது.ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன்.மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.செம ருசியில் ஜெய்யின் ‘வடகறி’ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க விறுவிறுப்பான கட்டத்தில் தயாராகி வருகிறது ஜெய்யின் வடகறி.சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி மீண்டும் வடகறி என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார்.கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சமீபத்தில் இந்தப்படத்திற்காக அபாரமான சில காட்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார் இயக்குனர் சரவணராஜன்.முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் விரைவில் அடுத்தகட்டம் நகரும் என தெரிவித்துள்ளார் இயக்குனர்.அனுஷாவாக மாறிய சுனைனாநியுமராலஜிப்படி தன் பெயரை அனுஷா என மாற்றிக்கொண்டாராம் சுனைனா.காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா.பின்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் சமீபத்தில் வெளியான சமர், நீர்பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார்.சுனைனாவாக வலம் வந்த இவர் தற்போது அனுஷாவாக மாறியுள்ளாராம்.காரணம் கேட்டால், நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள்.இப்போது ஒரு பண்டிட்டிடம் என் ஜாதகத்தை காட்டியபோது ‘ஷா’ என்ற எழுத்தில் முடியும்படி பெயர் வைத்தால் எனக்கு நல்ல விடயங்கள் நடக்கும் என என் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.அதனால் அவர்கள் விருப்பத்திற்காக ‘அனுஷா’ என எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.மேலும் பெயர் மாற்றியதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. காரணம் வீட்டிலும், என் நண்பர்களும் என்னை செல்லப்பெயரில்தான் அழைப்பார்கள் என்கிறார் சுனைனா.ஜில்லாவில் ஆல் இன் ஆளாக வலம் வரும் காஜல்மும்பை தேசத்து அழகு தேவதையான காஜல் அகர்வால் பகிர்ந்து கொண்ட சில தித்திக்கும் தருணங்கள்.சூர்யா ஜோடியாக மாற்றான் படத்திலும், கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.தற்போது மீண்டும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார்.இப்படம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராக உள்ளது.இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள ஜில்லா பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்கவுள்ளது.இதற்கிடையில் இந்த அழகு தேவதை பகிர்ந்துகொண்ட சில தித்திக்கும் தருணங்கள்.கேள்வி: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் என்ன கதாபாத்திரத்தில் வருகிறீர்கள்?பதில்: இதில் எனக்கு நல்ல வேடம், சித்ரா தேவிபிரியா என்ற கதாபாத்திரத்தில் வருகிறேன். பிடிவாதம் இருக்கும், ஆனால் மனதில் எதுவும் கிடையாது.கடவுளால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசாக தன்னை நினைத்துக் கொண்டு வாழும் பெண்.படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் ஜாலியாக இருந்தது.கேள்வி: கார்த்தியுடன் நடித்த அனுபவம்?பதில்: ஏற்கனவே நான் மகான் அல்ல படத்தில் அவருடன் நடித்துள்ளேன். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். உதவிகள் செய்வார்.இப்போது அவரது நடிப்பு திறமை முன்பை விட அதிகமாகி இருப்பதை அறிகிறேன். துடிப்பான ஆள். அவரது பலத்தை உணர்ந்தவர்.இயக்குனர் சொன்னபடி சிறப்பாக நடித்தாலும் அவருக்கு திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் நடிப்பார்.கேள்வி: சூர்யா, கார்த்தியிடம் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்.பதில்: கார்த்தி ஜாலியாக இருப்பார். சூர்யா அப்படியல்ல. வெளிப்படையாக பேசாத கூச்ச சுபாவம் உள்ளவர். இருவரும் ஒழுக்கமாகவும், பண்பாடு மீறாமலும் வளர்ந்து இருக்கிறார்கள்.கேள்வி: இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?பதில்: ஏற்கனவே ஒப்பந்தமான தமிழ் படங்களை முதலில் முடிக்க வேண்டும். விரைவில் இந்திப் படம் ஒன்றிலும் நடிப்பேன்.கேள்வி: இன்னொரு நாயகியுடன் இணைந்து நடிப்பது பற்றி?பதில்: ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடிப்பது வரவேற்கத்தக்கது.நான் கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறேன். இன்னொரு நாயகியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. தெலுங்கு படங்களில் இதுபோல் சேர்ந்து நடிக்கிறார்கள்.கேள்வி: விஜய்யுடன் நடிக்கும் ஜில்லா படத்தில் உங்கள் வேடம்?பதில்: ஜில்லாவில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் வருகிறேன். துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம்.