தனது கணவருடன் மீண்டும் நடிக்க வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட்டின் கனவு கன்னியான ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
பின்பு பன்சாலி இயக்கத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரீ எண்ட்ரி ஆகப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
ஆனால் குத்துபாடலுக்கு நான் நடனம் ஆடவில்லை என்று மறுத்துவந்தார் ஜஸ்வர்யா.
இந்நிலையில் ரீ எண்ட்ரியை தனது கணவருடன் ஆரம்பிக்கப்போகிறாராம்.
இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிமேஸ் ரேஷாமியா மாசும் படத்தினை ரீமேக் செய்யப்போகிறாராம்.
இந்த படத்தில் நசுதின் ஷா மற்றும் சபானா அசிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய உள்ளராம்.
இதற்காக பச்சன் குடும்பத்திடம் இருந்து வரும் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.
மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகிதான்! ரிச்சா
மேக்கப் இல்லாவிட்டாலும் நான் அழகு ராணிதான் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரிச்சா.
மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ரிச்சாவுக்கு இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பு இல்லை.
இதனால் தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
ரிச்சா போன்ற நடிகைகள் மேக்அப் போடுவதால் தான் அழகாக இருக்கின்றனர் என்பது போன்ற செய்திகள் வெளியானதால் கடும் டென்ஷனானார் ரிச்சா.
மேக்அப் இல்லாமல் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, மேக்அப் இல்லாவிட்டாலும் நான் அழகு தான் என குறிப்பிட்டு தன்னை விமர்சித்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.
ஆரோக்கியமான உணவு, நல்ல துாக்கமும் இருந்தால், யாருமே அழகாக இருக்கத் தான் செய்வார்கள்.
அடிக்கடி ஜூஸ் குடிப்பதன் மூலமும், முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ் வேறு கொடுத்துள்ளார் ரிச்சா
விஷாலின் முதல் குழந்தை யார் தெரியுமா?
என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் பாண்டிய நாடு படம்தான் எனக்கு முதல் குழந்தை என்கிறார் விஷால்.
விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘பாண்டியநாடு’.
விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது.
விஷால் தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியீடு சென்னை லயோலா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஒத்தகடை ஒத்தகடை மச்சான் என தொடங்கும் பாடலை கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
பின்பு பேசிய விஷால், இதே கல்லூரியில் தான் நான் விஸ்காம் படித்தேன்.
கல்லூரியில் படித்து முடித்து விட்டு சினிமாவில் இயக்குனராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் காலத்தின் சூழ்நிலை நடிகராகிவிட்டேன்.
எனது தயாரிப்பில் வெளியாக இருக்கும் முதல்படம் பாண்டியநாடு. கிட்டத்தட்ட எனது முதல் குழந்தை போன்றது இப்படம்.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது.